
இந்தியாவில் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே கோப்பை நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளா கேரளா மற்றும் ரயில்வேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ர கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ரயில்வேஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிவம் சௌத்ரி 3 ரன்களுக்கும், விவேக் சிங் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பிரதாம் சிங் - சஹப் யுவராஜ் இணை சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 61 ரன்களை எடுத்திருந்த பிரதாம் சிங் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஹப் யுவராஜ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 121 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ரயில்வேஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை எடுத்தது.