
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 13 பந்தில் 21 ரன்கள் அடித்தார். 36 ரன்கள் அடித்த ராகுல் 13வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 96 ரன்கள் ஆகும். விராட் கோலி ஒருமுனையில் நிலைத்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோர் செய்து அரைசதம் அடித்தார். ஆனால் 4ஆம் வரிசையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் காட்டடி அடித்து மிரட்டிவிட்டார்.
சமகாலத்தின் தலைசிறந்த பவுலர்களையே தெறிக்கவிடுபவர் இந்தியாவின் 360 சூர்யகுமார். ஹாங்காங் பவுலர்களை சும்மா விடுவாரா..? ஹாங்காங் பவுலர்களின் பவுலிங்கை அடி வெளுத்துவாங்கிவிட்டார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதத்தை எட்டிய சூர்யகுமார் யாதவ், 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 261.54 ஆகும்.