இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது. இந்த போட்டியில் முதல் நாளில் 24.1 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய தொடர்ந்து ஆட்டத்தில் மேலும் ஒரு விக்கெட் கூட கொடுக்காமல் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இன்று தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. விராட் கோலி 122, கே எல்.ராகுல் 111 ரன்கள் எடுத்தார்கள். இதன் மூலம் கேஎல் ராகுல் தன்னுடைய உடல் தகுதியை போட்டியின் மூலமாகவே நிரூபித்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பை நெருங்கி வரும்வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எப்படியான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள இந்த போட்டி உதவியிருக்கிறது.
இந்த போட்டியில் கேஎல்.ராகுல் 100 பந்துகளில் சதத்தை எட்ட, விராட் கோலி 84 பந்துகளில் எட்டினார். இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 47ஆவது சதமாகும். இதன்மூலம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 47ஆவது சதம் அடித்த வீரர் என்ற ஒரு சாதனையை படைத்தார்.