
கரோனா வைரஸின் இரண்டாவது அலையால் இந்திய மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடமில்லாமல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் தங்காள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரவந்தி நாயுடு வின் தாயார் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் அவரது சிகிச்சைக்கு ஏற்கெனவே 16 லட்சம் ரூபாய் செலவான நிலையில், மேல் சிகிச்சைக்கு ரூ. 6 லட்சத்து 77 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது.