
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களிலும் என ஆட்டமிழக்க, பின்னர் இணைந்து பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் - அக்ஸர் படேல் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பின் கேஎல் ராகுல் 31 ரன்னிலும், அக்ஸர் பட்டேல் 33 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த ஷிவம் தூபே 25 ரன்களுக்கும், அர்ஷ்தீப் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.