Advertisement

ஐபிஎல் 2022: முதல் போட்டிக்காக உற்சாகத்தில் இருக்கும் விராட் கோலி!

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி விட்ட விராட் கோலி தனது அணியின் முதல் போட்டி குறித்து பரவசமாக உள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 26, 2022 • 13:44 PM
Virat Kohli Heads Into Matchday Weekend With 'Butterflies In Stomach'
Virat Kohli Heads Into Matchday Weekend With 'Butterflies In Stomach' (Image Source: Google)
Advertisement

2022ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசன் இன்று தொடங்குகிறது. மும்பையில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதையடுத்து நாளை 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த இரு போட்டிகளிலும் ஒரு விசேஷம் ஒளிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி துறந்துள்ளார். அதேபோல பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியுள்ளார். இருவரது ரசிகர்களும் இதனால் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இரு அணிகளும் அடுத்தடுத்த நாட்களில் தங்களது முதல் போட்டியில் ஆடவுள்ளன.

Trending


இந்தப் போட்டி குறித்தும், ஐபிஎல் தொடர் குறித்தும் விராட் கோலி மிகவும் பரவசமாக உள்ளார் என்பதை அவரே ஒரு டிவீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோலி போட்டுள்ள டிவீட்டில், போட்டி நாள் நெருங்கி விட்டது. ஐபிஎல் தொடர்பான பரவசமும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. இந்த எதிர்பார்ப்பை விரும்புகிறேன். வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல உள்ளளது என்று கூறியுள்ளார் விராட் கோலி.

இன்றைய முதல் போட்டியும், நாளைய போட்டியும் மும்பையில்தான் நடைபெறவுள்ளது. இதனால் தோனியும், விராட் கோலியும் பயிற்சியின்போது நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த சந்திப்பும் ரசிகர்களிடையே பெரும் வைரலாகியுள்ளது. இரு முன்னாள் கேப்டன்களாக அவர்கள் களத்தில் இறங்கப் போவதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும், பெங்களூரு அணியின் கேப்டனாக பாப் டூ பிளஸ்ஸிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். டூ பிளஸ்ஸிஸ் இதுவரை சென்னை அணியில் இருந்தவர் என்பதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

2022 ஐபிஎல் தொடரில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகள் அறிமுகமாகின்றன. இதில் குஜராத் அணிக்கு கேப்டனாக ஹர்டிக் பான்ட்யா செயல்படவுள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், முகம்மது சிராஜ், ஹர்ஷல் படேல், ஃபாஃப் டூ பிளெசிஸ், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசல்வுட், ஷபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், மஹிபால் லோம்ரார், பின் ஆலன், ஷெர்பான் ரூதர்போர்ட், ஜேசன் பெஹரன்டார்ப், சுவாஷ் பிரபுதேசாய், சமா மிலிந்த், அனீஷ்வர் கெளதம், கரன் சர்மா, சித்தார்த் கெளல், லுவ்னித் சிசோடியா, டேவிட் வில்லி


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement