
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. "ஈ சாலா கப் நம்தே" என்ற வாசகமும் பல்வேறு அணி ரசிகர்களாலும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதன் விளைவாக தான் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது அணி மாறவில்லை. தனது கடைசி போட்டி வரை ஆர்சிபியில் தான் இருப்பேன் எனத் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கோலியும் ஏலத்தில் பங்கேற்க முடிவெடுத்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “உண்மையை கூற வேண்டும் என்றால், ஆர்சிபியில் இருந்து விலக நான் யோசித்திருந்துள்ளேன். பலரும் என்னை அனுகினர். ஏலத்தில் வாருங்கள், நாங்கள் எப்படியாவது ஏலம் எடுக்கிறோம் என்றும் கூறினர். ஆனால் பின்னர் என் மனம் அதனை ஏற்கவில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.