Advertisement

இந்த இந்திய வீரர்கள் அம்பயராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது - சைமன் டஃபுல்!

இந்திய வீரர்களில் யாரெல்லாம் எதிர்காலத்தில் அம்பயர் ஆகலாம் எனத் தனது விருப்பத்தை சைமன் டஃபல் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 28, 2022 • 15:41 PM
 Virat Kohli or R Ashwin can become good umpires, reckons Simon Taufel
Virat Kohli or R Ashwin can become good umpires, reckons Simon Taufel (Image Source: Google)
Advertisement

உலகின் தலைசிறந்த அம்பயர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் சைமன் டஃபுல். களத்தில் எடுக்கும் தனது துல்லியமான முடிவுகளால் இவருக்கு  உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு.

ஆண்டின் சிறந்த நடுவருக்கான விருதை தொடர்ச்சியாக 5 முறை வாங்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சைமன் டஃபுல், கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு தற்போது அம்பயரிங் கோச்சிங் கிளாஸ்ஸை நடத்திவரும் சைமன் டஃபுல் திறமையான புதிய அம்பயர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

Trending


இந்நிலையில் இந்திய வீரர்களில் யாரெல்லாம் எதிர்காலத்தில் அம்பயர் ஆகலாம் எனத் தனது விருப்பத்தை சைமன் டஃபுல் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும் தொடக்கவீரருமான வீரேந்தர் சேவாக் அம்பயரிங்குக்கு சிறந்த தேர்வாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார் சைமன் டஃபுல். சேவாக்கிடம் இதுகுறித்து முன்பு ஒருமுறை அவர் கூற, அதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டாராம் சேவாக்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோரும் எதிர்காலத்தில் அம்பயர்களாகச் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் எனக் கணித்துள்ளார் சைமன் டஃபுல்.

கிரிக்கெட் விதிகள் பற்றி நல்ல புரிதல் மற்றும் கள அனுபவம் உள்ளிட்டவை இந்த வீரர்களுக்கு அத்துப்படி எனும் காரணத்தால் அம்பயரிங்குக்கு சிறப்பாக இருக்கும் எனத் தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement