
கேப்டன் பதவியால் தமது பேட்டிங் பாதிக்கப்படுவதாக கூறி, அனைத்து விதமான போட்டியிலிருந்தும் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்தார். எந்த அழுத்தமும் இல்லாததால் விராட் கோலி இம்முறை ஐபிஎல் தொடரில் பட்டாசு போல் தெறிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் விராட் கோலி இருந்த ஃபார்மில் இருந்து மோசமாக ஆகிவிட்டது. பேட்டிங்கில் சுத்தமாக ரன் எடுப்பதில்லை. ஒரு காலத்தில் ஒரே சீசனில் 4 சதம் விளாசிய விராட் கோலி, நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 8 போட்டியில் மொத்தமே அவர் அடித்த ரன்கள் 119. இதில் அதிகபட்ச ஸ்கோர் 48 ரன்கள்.
இதில் மிகவும் கோலி ரசிகர்களின் மனதை பாதிக்கப்படும் விசயம் எனன தெரியுமா? தொடர்ந்து 2 இன்னிங்சில் கோல்டன் டக்காகி வெளியேறியது தான். இதனால் கோலி, கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்து கொண்டு மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி கூறியிருந்தார்.