
இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியது பெரும் சர்ச்சையாக மாறியது. முக்கியமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி - கோலி இடையே இருந்த கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரியவந்தது.
இந்த பிரச்சினை முடிந்துவிட்டது என நினைத்த சூழலில் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விராட் கோலி தற்போது கேப்டன்சி பொறுப்பு இன்றி முழு நேர பேட்ஸ்மேனாக கவனம் செலுத்தி வருகிறார். எனினும் அவரால் பழைய ஃபார்முக்கு வர முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற இலங்கை தொடரிலும் பெரிதாக சோபிக்கவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கங்குலி, விராட் கோலி இனி ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி தன்னை நிரூபித்தால் தான் இந்திய அணியில் வாய்ப்பு என தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் ஜூன் மாதத்தில் ரஞ்சிக்கோப்பை தொடரின் 2ஆவது பகுதியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவுள்ளார்.