
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் போட்டிகளிலும் நடந்து முடிந்து, தற்போது பிளே ஆஃப் சுற்றுகள் துவங்கிவிட்டன.பிளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்க மொத்தம் 10 அணிகள் முட்டிமோதிய நிலையில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதில் 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎலில் பங்கேற்று வருவது ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள்தான். ராஜஸ்தான் கூட துவக்க சீசனில் கோப்பையை வென்றுவிட்டது. ஆனால், ஆர்சிபியோ இன்னமும் கோப்பை வெல்லாமல் இருந்து வருகிறது.
அனில் கும்ளே, டேனியில் விக்டோரி போன்ற ஜாம்பவான்கள் இந்த அணியை வழிநடத்தியும் கோப்பையை பெற்றுத்தர முடியவில்லை. இதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை கேப்டனாக இருந்த விராட் கோலி, தொடர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தும் கெய்ல், டிவிலியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும் ஆர்சிபியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.