
Virat kohli was told to continue as T20 captain for the sake of Indian cricket: National selector Ch (Image Source: Google)
இப்போது தான் தென் ஆப்பிரிக்க தொடரில் முதல் டெஸ்ட் போட்டியை வென்று பல சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் விராட் கோலி.
தற்போது தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, முடிந்த பிரச்சினையை மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.
டி20 கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்த நிலையில், அவரிடமிருந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அப்போது, ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி20 க்கு ஒரு கேப்டன்என இருக்க முடியாது என்பதால், தாங்களே இருப் பிரிவுகளிலும் கேப்டனாக தொடர வேண்டும் என்று விராட் கோலியிடம் கூறியதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறினார்