
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 க்கு 0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “இந்த தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்த தொடரில் கிடைத்த வெற்றி மூலம் பாசிட்டிவான நிறைய விடயங்கள் நமக்கு கிடைத்துள்ளன.
நம் அணியின் பெஞ்ச் வலிமை என்ன என்பது இந்த தொடரின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. அணியில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டியது மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த தொடரில் வாய்ப்புக்காக காத்திருந்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.