
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்வதேச களத்தில் அசத்தி வருபவர் பாபர் ஆசாம். 28 வயதான அவர் 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,813 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 679 ரன்கள் குவித்திருந்தார். அதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். அதன் காரணமாக 2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை அவர் வென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணியை வழிநடத்திவரும் பாபர் ஆசாம், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு எனது பிரதான இலக்காக என்னவென்றால், அது நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சதம் விளாசுவது மற்றும் பெஷாவர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதும்தான். அதேபோல நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் எனவும் விரும்புகிறேன். எனக்கு எங்கள் அணி வெற்றி பெறுகின்ற அணியாக இருக்க வேண்டும்.