
ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்தே டேவிட் வார்னரின் பேட்டிங் ஃபார்ம் பெரிதளவில் இல்லை. முதல் சுற்றிலும் தொடர் தோல்விகளால் வெறுப்படைந்த வார்னர், கேப்டன் பதவியிலிருந்து விலகினார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் பேட்டிங்கில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மோசமாக ஆடியதால், அவரை அணியிலிருந்து நீக்கி பெஞ்ச்சில் அமரவைத்தனர்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு இரு புதிய அணிகள் வர இருப்பதால் மிகப்பெரிய ஏலம் நடக்க உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் இருப்பாரா எனத் தெரியாது. அதை சூசகமாக உணர்த்தி, வார்னர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்“அழகான நினைவுகளை உருவாக்கியதற்கு நன்றி. எங்கள் அணியை வழிநடத்தும் உத்வேகத்தை 100 சதவீதம் அளித்தது ரசிகர்களும், அவர்களின் ஆதரவும்தான். உங்களின் ஆதரவுக்கு நான் நன்றி கூறுதல் போதுமானதாக இருக்காது. மிகப்பெரிய பயணமாக அமைந்தது. என்னுடைய குடும்பமும், நானும் உங்களைப் பிரிந்து தவிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.