
கடந்த ஜூன் மாதம் நடந்த யூரோ-2020 கால்பந்துப் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோ பேசினார். அவர் பேச்சைத் தொடங்கும்முன் தன் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கோகோ-கோலா பாட்டில்களை நீக்குமாறு உத்தரவி்ட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று ரொனால்டோ தெரிவித்தார்.
ரொனால்டோவின் இந்த செயலுக்குப்பின் உலகளவில் கோகோ-கோலாவின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. அதன்பின் கோலா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து குடிக்கலாம். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சுவை, தேவை இருக்கிறது” எனத் தெரிவித்தது.
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் நேற்று டி20உலகக் கோப்பைப் போட்டியிலும் நிகழ்ந்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நீண்டகாலமாக பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 65 ரன்கள் அடித்து ஃபார்முக்குத் திரும்பினார்.