
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தீபக் ஹூடா 41 ரன்களும், அக்ஷர் பட்டேல் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்த இந்திய அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்பின் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான பதும் நிஷன்கா வெறும் 1 ரன் மட்டுமே எடுத்துவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த போட்டியின் மூலம் இந்திய அணியில் கால் பதித்த ஷிவம் மாவி தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தி கொடுத்ததன் மூலமும், இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷான்காவின் (45) விக்கெட்டை உம்ரன் மாலிக் சரியான நேரத்தில் வீழ்த்தி கொடுத்ததன் மூலம், கடைசி 2 ஓவருக்கு 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை இலங்கை அணி சந்தித்தது.