
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது ரசிகர்கள் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 154 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் சரியான திட்டத்துடன் களமிறங்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே 8ஆவது முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களை கடந்த இரு நாட்களாக ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற வாசிம் அக்ரம், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஃபிட்னஸ் சோதனை கிடையாது என்று சில உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த விவாதத்தில் வாசிம் அக்ரம் பேசுகையில், “பாகிஸ்தான் வீரர்களின் உடல்தகுதி குறித்து கவலை அளிக்கிறது. தற்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த ஃபிட்னஸ் சோதனைகளும் வைக்கப்படுவதில்லை.