 
                                                    
                                                        Wasim Jaffer’s Latest Twitter Post Sends Fans Into A Tizzy (Image Source: Google)                                                    
                                                இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 368 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.
அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களைச் சேர்த்து, நான்காம் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது. இதனால் இப்போட்டியில் யார் வேற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருவர்த்துவர்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 3 அணி ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        