
WATCH: A ball boy taking catch in a same over when two Indian players have dropped their catches (Image Source: Google)
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா பங்கேற்க உள்ளது. போட்டிகள் இன்றும், அக்டோபர் 9,11 ஆகிய தேதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இதில் லக்னோவில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஓபனர் ஜனிமேன் மலான் 22, டெம்பா பவுமா 8 ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து மார்க்கரமும் 0 ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இருவரும் அரை சதம் அடித்து விளையாடி வந்தார்கள்.