
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியான மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டலம் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவையில் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்கள் மட்டுமே அடிக்க, தெற்கு மண்டல அணி 327 ரன்களை குவித்தது.
57 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கு மண்டல அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். ஜெய்ஸ்வால் 265 ரன்களை குவித்தார். சர்ஃபராஸ் கான் சதமடித்தார் 127. இதனால் 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 585 ரன்களை குவித்து அந்த அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்மண்டல அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் தென்மண்டல வீரர் ரவி தேஜா பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது அவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்லெட்ஜிங் செய்ய, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.