
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடான் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 11 ரன்களுக்கும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 ரன்களுக்கும், அஜிங்கியா ரஹானே 30 ரன்களுக்கும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடி வந்த ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையானா ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, ரியான் பராக் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.