
எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடியதுடன் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 56 ரன்களில் பிரீவிஸ் தனது விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 23 ரன்களையும், டெலானோ போட்ஜிட்டர் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை நோகி விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க 16 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களுக்கும், மார்கோ ஜான்சன் 14 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.