Advertisement
Advertisement
Advertisement

இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த பவுண்டரி ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி!
இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 07, 2024 • 11:05 AM

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று தொடங்கியது. அதன்படி குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 07, 2024 • 11:05 AM

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் மெஹிதி ஹசன் மிராஸ், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.  இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணியானது 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

Trending

அந்த அணியில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 35 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 27 ரன்களையும் சேர்த்தனர் இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைபற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமர் யாதவும் 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சனும் 29 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும், நிதீஷ் குமார் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த பவுண்டரி ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி தஸ்கின் அஹ்மது வீசிய 11ஆவது ஓவரின் 3ஆவது பந்தை பவுன்சராக வீச, அதனை யாரும் எதிர்பாராத வகையில் ஹர்திக் பாண்டியா பந்தை பார்க்காமலேயே கீப்பர் தலைக்குமேல் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement