
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.பிளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால், இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டும். மேலும், அந்த 6 போட்டிகளின் இரண்டில் அபார வெற்றியைப் பெற்று, நெட் ரன் ரேட்டையும் உயர்த்தி வைக்க வேண்டும்.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பேட்ஸ்மேன்களில் ஒருவர் சொதப்பினாலும் மற்றவர் சிறப்பாக செயல்பட்டு, ரன்களை சேர்த்து விடுகிறார்கள். இருப்பினும், பந்துவீச்சுதான் அணிக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிடோரியஸ் தொடர்ந்து சொதப்பலாக பந்துவீசி வருகிறார்கள். இதனால், பிராவோவும் அழுத்தங்களுடன் பந்துவீசி அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். இதனை சரிசெய்யவில்லை என்றால், சிஎஸ்கே இனி வரும் போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.