
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை ஆர்சிபி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 208 என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்களும் அரங்கேறின. ரஜத் பட்டிதாரின் அதிவேக சதம், டூப்ளசிஸின் அட்டகாசமான கேட்ச், கே.எல்.ராகுலின் விக்கெட், ஹர்ஷல் பட்டேலின் பவுலிங் என அடுத்தடுத்த திருப்பங்களால் போட்டி கலைக்கட்டியது. இந்நிலையில் யாரும் அறியாத மற்றொரு சுவாரஸ்ய விஷயமும் அரங்கேறியது.
ஆட்டத்தின் 20வது ஓவரில் கடைசி 4 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சமீரா சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் பரபரப்பான கட்டத்தில் 4வது பந்தை வீசுவதில் திடீரென தாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம் கம்பிகளை தாண்டி களத்திற்குள் திடீரென ஒரு இளைஞர் குதித்துவிட்டார்.