Advertisement

BAN vs IND, 1st ODI: டாப் ஆர்டரை இழந்து தவிக்கும் இந்திய அணி!

வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தவான், ரோஹித், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 04, 2022 • 13:25 PM
WATCH: Litton Das Grabs A 'Screamer' To Dismiss In Form Batter; 'Shocks' Virat Kohli
WATCH: Litton Das Grabs A 'Screamer' To Dismiss In Form Batter; 'Shocks' Virat Kohli (Image Source: Google)
Advertisement

வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மிர்பூரில் நடைபெறுகிறது. 

சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்தியா வெற்றது. ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி வென்றது. இந்நிலையில், வங்கதேசம் அணியுடனான ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது. 2ஆவது போட்டி டிசம்பர் 7-ம் தேதியும், 3ஆவது போட்டி டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறுகிறது.

Trending


இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா- ஷிகர்தவான் களமிறங்கினர். ரோஹித் 27 ரன்களிலும், தவான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கோலி 9 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு பேரதீர்ச்சி கொடுத்தார். அதிலும் ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் ஷாகிப் அல் ஹசனின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

 

அதன்பின் கேஎல் ராகுலுடன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயரும் 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் 100 ரன்களுக்கு உள்ளேவே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement