
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச்சுற்று ஆட்டத்தில் பெங்கால் மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெங்கால் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பெங்கால் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அபிஷேக் போரல் 8 ரன்னிலும், சுதிப் கராமி ரன்கள் ஏதுமின்றியும், காந்தி 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் கரன் லால் தனது பங்கிற்கு 33 ரன்களையும், விருத்திக் சாட்டர்ஜி 28 ரன்களையும், பிரதிபா 30 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தின.
இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது ஷமி அதிரடியாக விளையாடியதுடன் 17 பந்துகளில் 3 பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையன ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பெங்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரகளைச் சேர்த்தது. சண்டிகர் அணி தரப்பில் ஜக்ஜித் சிங் 4 விக்கெட்டுகளையும், ராஜ் பாவா 2 விக்கெட்டுக்ளையும் கைப்பற்றினர்.