
Watch: Ravindra Jadeja Urges Fans To "Come Together" To Battle COVID-19 Pandemic (Image Source: Google)
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அவசர கூட்டத்தை நடத்தி உடனடியாக ஐபிஎல் தொடரை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
ஐபிஎல்லில் பங்கேற்றக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மக்களிடையே எவ்வாறு கரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவிந்திர ஜடேஜாவும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.