-mdl.jpg)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. இதனால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்த நிலையில், போட்டி தொடங்கியது முதல் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இஷான் கிஷனும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்திய அணிக்காக ஓப்பனிங் களமிறங்கினர். ஐபிஎல் போட்டியில் மோசமான ஃபார்மில் இருந்த இஷான் கிஷன், இந்திய அணிக்காக இந்த தொடரில் களமிறங்கியபோது சிறப்பாக ஆடினார்.
இந்தப் போட்டியில் சிக்சர் அடித்து தன்னுடைய ரன் கணக்கை தொடங்கினார். அவரின் அதிரடியால் இந்திய அணியின் ரன் கணக்கும் முதல் ஓவரிலேயே 10 ரன்களை கடந்து கம்பீரமாக இருந்தது.