அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரியான் பர்ல் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 15 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய விராட் கோலி 26 ரன்களும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 51 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் கடைசி பந்து வரை ஜிம்பாப்வே அணியை பந்துவீச்சை சிதறடித்த சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் அடித்த பந்தை ஜிம்பாப்வின் ரியான் பார்ல் தாவிபிடித்து அசத்தினார். அவரது கேட்ச் பிடித்த காணொளி தற்போது இணையாத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now