
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுட 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல் தரப்பில் டேரின் டுபாவில்லன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து 27 ரன்களில் வில் ஜேக்ஸும், 12 ரன்களில் கேப்டன் ரைலீ ரூஸோவ் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கேப்பிட்டல்ஸ் அணி 61 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.