
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸின் சூர்யா ஆனந்த் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியில் பலச்சந்தர் அனிருத் 48 ரன்களையும், ஆதீக் உர் ரஹ்மான் 36 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாத்வ் 3 விக்கெட்டுகளையும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல் கிங்ஸ் அணி தரப்பில் கேப்டன் அருண் கார்த்திக் 67 ரன்களையும், இறுதிவரை போராடிய சோனு யதாவ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி 158 ரன்களில் ஆல் அவுட்டானது. பாந்தர்ஸ் தரப்பில் சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்முலம் மதுரை பாந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.