
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கேப்டனாக களமிறங்கிய ஷிகர் தவான், இன்று பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மாயங் அகர்வால் காயம் காரணமாக விலகியதால், சிம்ரன்சிங் தொடக்க வீரராக களமிறங்கினார். போட்டி தொடங்கியதும், முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்களை விட்டு கொடுத்தார். இதனை தொடர்ந்து யான்சென் கட்டுகோப்பாக பந்துவீசி 2வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அவர் விட்டு கொடுத்தார். ஆனால் அடுத்த ஓவரிலே புவனேஸ்வர் குமார் ஷிகர் தவான் விக்கெட்டை சாய்த்தார்.
இதனை தொடர்ந்து நடராஜன் பந்துவீச்சில் ஷிம்ரன்ஜித் சிங் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாச அடுத்த பந்திலேயே டிஆர்எஸ் விதியால் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாரிஸ்டோ, லிவிங்ஸ்டோன் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. குறிப்பாக லிவிங்ஸ்டோன் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.