
கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் தூணாக பார்க்கப்பட்ட கேப்டன் டீன் எல்கர் 22 ரன்களுக்கு வெளியேறியிருக்க வேண்டும். அவர் அவுட்தான் என அனைவரும் நம்பினர். ஆனால் டி ஆர் எஸில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார் 3ஆவது நடுவர்.
ஆட்டத்தின் 20 ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் டீன் எல்கர் எல்.பி.டபள்யூ அவுட் ஆனார். கள நடுவரும் அதற்கு அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் டீன் எல்கர் 3ஆவது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். "யாருப்பா இவரு.. இவ்வளவு கீழாக சென்ற பந்திற்கு ரிவ்யூவ் கேட்கிறாரே என பலரும் நகைத்தனர்". ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்காது, விக்கெட் மிஸ்ஸிங் என்பது போன்ற வீடியோவை கான்பித்து நாட் அவுட் கொடுக்கப்பட்டது.