
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் தோல்வியைத் தழுவியது. மேலும் விராட் கோலி இந்தப் போட்டியில் சாதாரண வீரராக விளையாடினார். கேப்டன் என்ற பொறுப்பு இருக்கும் போதே கோலி ஆக்கோரஷமாக இருப்பார். இப்போது கேட்கவா வேண்டும்.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவும், வெண்டர் டுசனும் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர் கேப்டன் பெவுமா 110 ரன்களும், வெண்டர் டுசன் 129 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு ஆதிக்கம் செலுத்தினர். இதனால் கடுப்பான விராட் கோலி, தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார்.
பவுமா ரன் எடுக்க முயற்சித்த போது, கோலி நேராக பவுமாவை பார்த்து ஓங்கி எறிந்தார். அப்போது பவுமாவிடம் நான் இனி கேப்டன் கிடையாது. போட்டி முடிந்ததும் யாரிடமும் கைக் கட்டி நிற்க தேவையில்லை. உனது எல்லையிலேயே நில்லு, இல்லை என்றால் பேட்டிங்கே உனக்கு மறக்கும் அளவுக்கு செய்துவிடுவேன் என்று காட்டமாக கூறினார்