
தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் இந்திய ரன் மெஷின் விராட் கோலிக்கு சமமாக, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் ஒப்பிடு வைத்து அலசப்படுகிறார். அவருக்கென்று பிரத்தியேக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும் அவர் தனிப்பட்ட வீரராக மட்டுமே சிறப்பானவராக இல்லாமல், அவருடைய பேட்டிங் திறமை பாகிஸ்தான் கிரிக்கெட்டை எழுச்சி அடைய வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்பொழுது பாபர் ஆசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கௌரவ அடையாளமாக பாகிஸ்தானியர்களால் முன்னிறுத்தப்படுகிறார். பாபர் ஆசாமை பொருத்தவரை எடுத்துக் கொண்டால், மிகக் குறிப்பாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான தொடர்ச்சியான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய ரன் சராசரி 60க்கும் மேல் இருக்கிறது.
அதே சமயத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக சதங்களை குவித்து வருகிறார். ஆசியக் கோப்பை முதல் போட்டியில் நேபால் அணிக்கு எதிராக 151 ரன்கள் விளாசியதின் மூலம், 19 ஒரு நாள் கிரிக்கெட் சதங்களை மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் அடுத்தவர் என்ற உலகச் சாதனையை படைத்தார்.