
இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தி 3 வகையான தென்னாப்பிரிக்க அணியிலும் முதன்மை வீரராக நிரந்தர இடம் பிடித்தார்.
அதே போல ஐபிஎல் தொடரிலும் மும்பை, லக்னோ போன்ற அணிகளில் அதிரடியாக விளையாடிய அவர் இந்திய ரசிகர்களின் அபிமான வீரராகவும் பார்க்கப்படுகிறார். இருப்பினும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாடி தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக கடந்த வருடம் 29 வயதிலேயே போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது 30 வயதில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விடை பெற உள்ளது தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையின் போது கிரிக்கெட்டில் இருக்கும் நிற வெறி சர்ச்சைக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒற்றை காலில் மண்டியிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அதை விரும்பாத குயிண்டண் டீ காக் அப்படி செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார். அதன் காரணமாக அடுத்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் 2 நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்டதால் மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.