Advertisement

இது எங்களின் சிறப்பான ஆட்டம் கிடையாது - டெம்பா பவுமா!

இந்தியாவுடனான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா விளக்கியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 15, 2022 • 13:22 PM
 'We didn't pitch up': Bavuma on T20 loss to India
'We didn't pitch up': Bavuma on T20 loss to India (Image Source: Google)
Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி படுமோசமாக தோற்று, சொதப்பிய நிலையில், தொடரை இழக்காமல் இருக்க மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 (35), இஷான் கிஷன் 54 (35 இருவரும் சிறப்பான துவக்கம் தந்தார்கள். அடுத்து ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசியதால், இந்திய பேட்டர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இறுதிக் கட்டத்தில் ஹார்திக் பாண்டியா 31 (21) மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 179/5 ரன்களை சேர்த்தது.

Trending


இலக்கை துரத்திக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக, பவர் பிளேவிலேயே ஸ்பின்னர்களை பயன்படுத்தியது இந்திய அணி. இதனால், பேட்டர்கள் தடுமாறினார்கள். அதிகபட்சமாக கிளாசின் 29 (24) ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஹென்ட்ரிக்ஸ் 23 (20), பிரிடோரியஸ் 20 (16) ஆகியோர் மட்டுமே 20+ ரன்களை சேர்த்தார்கள். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால், தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்கள் முடிவில் 131/10 ரன்களை மட்டும் சேர்த்து, 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதனால், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி 17ஆம் தேதி நடைபெறும்.

இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா,‘‘இது எங்களின் சிறந்த ஆட்டம் கிடையாது. இந்திய அணி எங்களுக்கு பந்துவீச்சை வைத்து அழுத்தம் கொடுத்தது. நாங்கள் சிறப்பாக பீல்டிங் செய்யவில்லை. பார்ட்னர்ஷிப்பும் இல்லை. இந்த இரண்டும்தான், எங்கள் அணியின் வெற்றியை தடுத்தது. பொதுவாக நாங்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுபவர்கள்தான். இப்போட்டியில் படுமோசமாக சொதப்பினோம்.

குவின்டன் டி காக் அணியின் முக்கிய வீரராக இருந்தார். காயம் காரணமாக அவரால் களமிறங்க முடியவில்லை. மாற்றாக வந்த ஹென்ட்ரிக்ஸ் தொடர்ந்து டாப் ஆர்டரில்தான் களமிறங்குவார். அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஹென்ட்ரிக்ஸ்தான் அணியில் இருப்பார்’’ எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement