Advertisement

எங்களுடைய பந்துவீச்சு பிரிவு இந்திய பேட்டர்களுக்கு எதிராக  தடுமாறியது - சமாரி அத்தபத்து!

எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும், கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் நங்கள் தவறவிட்டோம் என்று இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
 எங்களுடைய பந்துவீச்சு பிரிவு இந்திய பேட்டர்களுக்கு எதிராக  தடுமாறியது - சமாரி அத்தபத்து!
எங்களுடைய பந்துவீச்சு பிரிவு இந்திய பேட்டர்களுக்கு எதிராக  தடுமாறியது - சமாரி அத்தபத்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2025 • 11:21 PM

இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 11, 2025 • 11:21 PM

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 51 ரன்களையும், நிலாக்‌ஷி டி சில்வா 48 ரன்களையும், விஷ்மி குணரத்னே 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற  வீரங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய சமாரி அத்தபத்து, “இன்றைய ஆட்டத்திற்கு இந்திய அணியைத்தான் பாராட்ட வேண்டும். 300+ ரன்களை துரத்துவது எப்போதும் எளிதல்ல, இருப்பினும் நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும், கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் நங்கள் தவறவிட்டோம். அதேசமயம் எங்களுடைய பந்துவீச்சு பிரிவும் இந்திய பேட்டர்களுக்கு எதிராக  தடுமாறியது. 

Also Read: LIVE Cricket Score

அதனால் உலகக் கோப்பைக்கு முன் நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் இவை. இத்தொடர் முழுவது நாங்கள் ஃபீல்டிங்கில் சராசரிக்கு குறைவாகவே இருந்தோம். அதனால் பல வாய்ப்புகளை தவறவிட்டோம். பேட்டிங்கில் சில பவர்-ஹிட்டர்கள் தேவை, எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நாங்கள் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். மேலும் இதற்காக தீவிர பற்சியையும் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முன் சில பகுதிகளில் நாம் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement