
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதற்கு மத்தியில், இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த சிரமமுல் இல்லை என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறி ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணியில் வீரர்களில் இதே போன்ற சில வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் நாங்கள் மயங்க் யாதவைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதாக நான் நினைக்கவில்லை.