
We Know How To Handle Certain Situations- Ajinkya Rahane (Image Source: Google)
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான பயிற்சியின் போது பேசிய இந்திய அணி துணைக்கேப்டன் அஜிங்ஜியா ரஹானே, எங்களுக்கு ஏற்படும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஹானே,“மக்கள் என்னை பற்றி பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தான். முக்கியமான நபர்கள் பற்றி தான் மக்கள் பேசுவார்கள் என்பதை எப்பொழுதும் நான் நம்புகிறேன். அது குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தமட்டில் அணிக்கு என்ன பங்களிக்கிறோம் என்பது தான் முக்கியமாகும். நாட்டுக்காக விளையாடுவது உத்வேகம் அளிக்கிறது. எனவே நான் விமர்சனம் குறித்து பொருட்படுத்துவது கிடையாது.