அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
இத்தொடரில் நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதுடன், அடுத்த போட்டிக்கு எப்போது தயாராக இருக்கெ வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் அசத்திய மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read
இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, “எங்களுக்கு இருந்த உத்வேகத்தை, நாங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். அணியில் உள்ள அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளனர். மேலும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான சூழ்நிலையை குழந்தைகள் எங்களுக்காக உருவாக்கினார்கள், நாங்கள் அவர்களுக்காக அதைச் செய்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அனைவரும் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டே இருந்தார்கள். பந்து வீச்சாளர்கள் சரியான நேரத்தில் செயல்பட்டனர். எல்லோரும் ஒருசேர சிறப்பாக செயல்படும் போது அணிகள் நல்ல நிலையில் இருக்கும். ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், கார்பின் போஷ் வரை, எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த தொடர் மிகவும் கடினமானது. அதனால் இதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதுடன், அடுத்த போட்டிக்கு எப்போது தயாராக இருக்கெ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 35 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now