
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் அசத்திய மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, “எங்களுக்கு இருந்த உத்வேகத்தை, நாங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். அணியில் உள்ள அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளனர். மேலும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான சூழ்நிலையை குழந்தைகள் எங்களுக்காக உருவாக்கினார்கள், நாங்கள் அவர்களுக்காக அதைச் செய்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.