
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்ற இந்திய அணி, பெங்களூரில் மூன்றாவது போட்டியில் களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் படுமோசமாக சொதப்பி, இறுதியில் மிரட்டலாக விளையாடி ரன் மழை பொழிந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து படுமோசமாக திணறியது. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 4, விராட் கோலி 0, ஷிவம் துபே 1, சஞ்சு சாம்சன் 0 ஆகியோர் அடுத்தடுதுத ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனால், இந்திய அணி 4.3 ஓவர்களிலேயே 22/4 என படுமோசமாக தடுமாறியது. இதனால், இந்திய அணி, 120 ரன்களை அடித்தாலே அது பெரிய விஷயமாக இருக்கும் எனக் கருதப்பட்டது.
அடுத்து, ரிங்கு சிங் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் அவுட் ஆகவே இல்லை. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212/4 ரன்களை குவித்தது. ரோஹித் 121 ரன்களையும், ரிங்கு சிங் 69 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, துவக்கம் முதலே ரன்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வந்தது.