
We Really Need To Start With Five Or Six Teams: Smriti Mandhana On Women's IPL (Image Source: Google)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் ஸ்மிருதி மந்தனா. அதிரடியான பேட்டிங் திறமையால் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீராங்கனையாகவும் இவர் வலம் வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் தளத்திற்கு பேட்டியளித்த மந்தனா, மகளிர் ஐபிஎல் தொடர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தனது கருத்தைக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மந்தனா,“இந்தியாவில் ஆடவர், மகளிருக்கு மாநிலங்களின் எண்ணிக்கை ஒரே அளவில் தான் உள்ளன. ஆடவர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கிய பிறகு அதன் தரம் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இப்போதுள்ள தரம் 10 வருடங்களுக்கு முன்பு இல்லை. இதேதான் மகளிர் ஐபிஎல் போட்டிக்கும் நடக்கும். மகளிர் ஐபிஎல் போட்டியை முதல் ஐந்து அல்லது ஆறு அணிகளுடன் தொடங்கலாம். ஓரிரு வருடங்களில் எட்டு அணிகளாக உயர்த்தலாம்.