
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் 11 வருடங்கள் தோனியே கேப்டனாக இருந்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடும் ஒப்படைப்பதாக கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஜடேஜா, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணிக்கிறார். ஆகையால் இவரும் நன்றாக கேப்டன் பொறுப்பை வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அப்படியே மாற்றாக எட்டு போட்டிகளில் ஆறில் தோல்வியை தழுவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு சிக்கலானது. முதல் எட்டு போட்டிகளுக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜடேஜா பகிரங்கமாக அறிவித்தார். மகேந்திர சிங் தோனி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு வழி நடத்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு, தற்போது இரண்டாவது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. மேலும் கடந்த ஐபிஎல் தொடர் நான்கு மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் தோனி கடைசியாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார்.