
தற்போதைய இந்திய அணியின் மூன்று விதமான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பெரும்பாலானவர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.
மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவருடைய பந்திவீச்சு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இல்லை. பின் தன்னுடைய கடின முயற்சியால் 2021 முதல் மீண்டும் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை முகமது சமி வெளிப்படுத்த துவங்கியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி வரும் முகமது சமி எப்படி மோசமான பார்மிலிருந்து மீண்டெழுந்தார் என்று இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.