
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு தோல்வி அடைந்தது.
இதனால் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றோம் என்ற புதிய வரலாறு படைக்க முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது. இதையடுத்து, விராட் கோலி, நேற்று தான் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவி்ப்பை திடீரென வெளியி்ட்டார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் அஸ்வினுக்கும், கோலிக்கும் இடையே உரசல் இருந்து வருகிறது என்ற தகவல் வெளியானது. அதனால்தான் இங்கிலாந்து பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினை களமிறக்கவி்ல்லை, டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வினை விளையாடவைக்கவில்லை என்பதால், அஸ்வின், கோலி இடையே கிரிக்கெட்டைத் தாண்டிய தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.