
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியை மாற்றி அமைப்பதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கான அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இவர்களது இடத்தில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இடம் பிடித்தார்கள். மேலும் இரண்டு இந்திய அணிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்ந்தார். டெஸ்ட் அணிக்கு ரகானே ஒருநாள் அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்கள்.
தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிசுற்றில் விளையாடி வருகிறது. முக்கிய வீரர்கள் அங்கு இருப்பதால், அந்தத் தொடரை முடித்துக் கொண்டு ஜூலை 12ஆம் தேதி நடக்கும் இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்பது கடினம்.