Advertisement

WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 27, 2025 • 12:47 PM

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்180 ரன்களைச் சேர்த்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 27, 2025 • 12:47 PM

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 190 ரன்களில் ஆல் அவுட்டானது. இருப்பினும் அந்த அணி 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 10 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதில் டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப், அல்ஸாரி ஜோசப், ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 82 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இப்போட்டியில் ஜெய்ஸ்டன் சீலஸ் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் விக்கெட்டை வீழ்த்தியவுடன், அதனைக் கொண்டாடும் விதமாக அக்ரோஷமாகவும், எதரணி வீரரை பெவிலியனுக்கு திரும்பும் படியும் வசைப்பாடியுள்ளார். ஐசிசி நடத்தை விதிகள் 2.5 பது இது குற்றமாகும். இதனையடுத்து ஜெய்டல் சீல்ஸுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் ஐசிசி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: LIVE Cricket Score

மேலும் கடந்த 24 மாதங்களில் ஜெய்டன் சீல்ஸுக்கு விதிக்கப்படும் இரண்டாவது அபராதமாகவும் இது அமைந்துள்ளது. இதற்கு முன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெய்டன் சீல்ஸ் தனது குற்றத்தை ஒப்புகொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவை இல்லை என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement